பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

மும்பை : மகாதேவ் ஆன்லைன் சூதாட்டம் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் அக்., 6க்குள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
வட மாநிலங்களில் மகாதேவ் ஆப் என்ற ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பேர் பணத்தை இழந்துள்ளனர். இதில் பல நூறு கோடி அளவுக்கு மோசடி நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்து, அதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விசாரணைக்காக அவர் அக்., 6க்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட மோசடியில் மேலும் சில பாலிவுட் பிரபலங்கள் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அவர்களுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.