தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் 'ஜவான்'. இப்படம் மீது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் உள்ள ஹிந்தி ரசினிமா ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஷாரூக்கான் நடித்து கடைசியாக வெளிவந்த 'பதான்' படம் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது. அப்படிப்பட்ட ஒரு படத்திற்குப் பின்பு வரும் படம் இது. மேலும், தமிழில் விஜய் நடிக்க சில சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த அட்லீ முதல் முறையாக ஹிந்தியில் இப்படத்தை இயக்குவதால் பாலிவுட்டினரும் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் டிரைலர் தயாராகி சென்சார் ஆன நிலையில் அடுத்த சில தினங்களில் டிரைலர் வெளியாகும் என்று தகவல் வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அதற்கான அறிவிப்பும் வெளியானது. நாளை ஜுலை 10ம் தேதி காலை 10.30 மணிக்கு டிரைலரை வெளியிட உள்ளார்கள். அதற்கு 'ஜவான் பிரிவியூ' என பெயர் வைத்துள்ளார்கள். பிரிவியூ என்பதை ஆங்கிலத்தில் 'Preview' என்றுதான் எழுத வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பில் அதை 'Prevue' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதில் ஏதும் குறியீடு இருக்கிறதா என்பது நாளை தெரிந்துவிடும்.
வியாபாரம் இத்தனை கோடியா?
வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் பிஸ்னஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் தியேட்டர் உரிமையை தவிர்த்து மற்ற உரிமைகளை பிஸ்னஸ் செய்துள்ளனர். இப்படத்தின் டிஜிட்டல், சாட்லைட், ஆடியோ உரிமைகளை சுமார் ரூ. 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.