பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஆனந்த ராகம் தொடர் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோயின் கதாபத்திரத்திற்கு அடுத்தப்படியாக, ஹீரோயினின் வாய் பேச முடியாத தங்கை அபியின் கதாபத்திரமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அபி கதாபத்திரத்தில் 750 எபிசோடுகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஸ்வேதா.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ள பதிவில், தன் வாழ்க்கையின் முக்கிய கட்டத்திற்கு வந்திருப்பதாகவும், அதற்காக தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் பதிவிட்டு ஆனந்தராகம் தொடரிலிருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
அண்மையில் தான் ரோஜா 2 தொடரிலும் ஸ்வேதா என்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதற்குள் அவர் சினிமா கேரியரிலிருந்து முற்றிலும் விலகியுள்ளதாக தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.




