ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரை இயக்குநர் ஓ.என்.ரத்னம் அழகு, வாணி ராணி போன்ற டிவி சீரியல்களை இயக்கினார். தற்போது ப்ரியமான தோழி, பாண்டவர் இல்லம் மற்றும் செவ்வந்தி ஆகிய ஹிட் தொடர்களை இயக்கி வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் ப்ரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட ஓ.என்.ரத்னம், தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ள மகன்களை சென்னைக்கு அழைத்து வர ஓ.என்.ரத்னம் புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதாம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மகன்களை வீட்டிற்கு அழைத்து வந்த போது அங்கே அவரது மனைவி சடலமாக கிடந்துள்ளார். ரத்னத்திற்கும் ப்ரியாவுக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த ப்ரியா, தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குநர் ஓ.என்.ரத்னத்தின் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.