
ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் காதலா? - சம்யுக்தாவின் நாடகத்தை அம்பலப்படுத்திய விஷ்ணுகாந்த்
விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பே சம்யுக்தா தன்னுடன் "நிறைமாத நிலவே" தொடரில் நடித்த ஆர்.ஜே.ரவியை காதலித்துள்ளார். அதன்பின் ஆர்.ஜே.ரவி தன்னிடம் அத்துமீறியதாக புகார் கூறி பிரிந்துள்ளார். அதன்பின் விஷ்ணுகாந்தை காதலிப்பதாக அறிவித்த சம்யுக்தா தொடர்ந்து ரவியுடன் ஆறுமாதமாக பேசியுள்ளார். அதிலும், ரவியை மறக்கமுடியவில்லை என்றும் அவருடன் மீண்டும் சேர வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
விஷ்ணுகாந்த தனது எக்ஸ் காதல் குறித்து சம்யுக்தாவிடம் மனம் திறந்து கூறிவிட்ட நிலையிலும், ரவியுடனான தனது உறவை சம்யுக்தா மறைத்து வைத்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி சம்யுக்தாவிடம் பேசிய நபர், விஷ்ணுகாந்திற்கு சம்யுக்தா உண்மையாக இல்லை என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில், இதுநாள் வரை உடனுக்குடன் லைவ் வந்த சம்யுக்தா தற்போது எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!