இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும், தனது தந்தை மம்முட்டியை போலவே தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். அதற்கேற்றபடி கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது தமிழில் 'ஹே சினாமிகா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்,. இந்தப்படத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். காஜல் அகர்வால், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் துல்கர் சல்மான். மலையாளத்தில் ஏற்கனவே பல படங்களில் அவர் பாடியிருந்தாலும், தமிழில் இதுதான் அவர் பாடும் முதல் பாடல். மதன் கார்க்கி இந்த பாடலை எழுத, '96' புகழ் கோவிந்த் வசந்தா இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழில் பாடியது குறித்து துல்கர் சல்மான் கூறும்போது, “இதுபோன்ற பாடல் கிடைத்தற்கு நான் உண்மையிலேயே புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.




