ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோரது நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள 'காடன்' திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கில் வனசரக அதிகாரியாக சம்பத்ராம் நடித்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், காடன் படத்தின் சண்டை காட்சியில் ராணாவுடன் நடித்தபோதுதான் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து சம்பத்ராம் கூறியதாவது: காடன் படப்பிடிப்பை என்னால் மறக்க முடியாது. 7 நாட்கள் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சியில் தான் எனக்கு அடிபட்டது. ஒரிஜினலாகவே என்னை ஸ்டண்ட் மேன் ஒருவர் தாக்க, நெஞ்சில் அதிகமாக வலி ஏற்பட்டு மயக்கமடைந்தேன். இருந்தாலும், வலியுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு நடித்தேன்.
பிறகு சென்னை வந்த போது தான், நெஞ்சில் இரத்தம் உறைந்திருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தேன். இப்படி வலியோடு நடித்தாலும், என் கதாப்பாத்திரத்திற்கும், நடிப்புக்கும் கிடைக்கும் பாராட்டுகள் பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன். பிரபு சாலமனின் இணை இயக்குநர் மணிபால் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறேன். பெல்பாட்டம், தொல்லைக்காட்சி, நாரப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறேன். என்றார்.