முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு | திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு | 'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி | நடிகர் தர்மேந்திராவுக்கு 'பத்ம விபூஷன்' விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார் | இயக்குனர் சேரனின் தாயார் காலமானார் | கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் | கார்த்தி 30 துவங்கியது | மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி' | இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா? | கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி |

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் ஆகியோர் இணைந்து நடித்து ரிலீஸிற்கு தயாராகி வரும் படம் 'வா வாத்தியார்'. இதுதவிர பிரதீப் ரங்கநாதன் உடன் ‛எல்.ஐ.கே' படத்தில் நடித்துள்ளார். இதையொட்டி கிர்த்தி ஷெட்டி அளித்த பேட்டியில், "பிரதீப் ரங்கநாதனை நான் கவனித்த வகையில் அவருடைய கணிப்பு எல்லாம் தெளிவாக உள்ளது . எல்.ஐ.கே பட டீசரில் 'எனக்கென யாருமில்லையே' என ஒரு பாடல் இடம் பெற்றது. அந்த பாடல் பத்து வருடத்திற்கு முன்பு அனிரூத் பாடியது. அந்தப் பாடலை இந்த டீசரில் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என பிரதீப் தான் கணித்தார். பிரதீப் ரங்கநாதன் படப்பிடிப்பில் சிரித்த முகத்துடன் எப்போதும் இருப்பார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு அழகான சூழலைக் கொண்டு வந்துவிடுவார்" என தெரிவித்துள்ளார்.




