தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

ரவி மோகன் புதிதாக துவங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக ‛ப்ரோ கோடு' என்கிற படத்தை தயாரிக்கிறார். இதில் அவரே கதாநாயகனாக நடிக்க, டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி இயக்குகிறார். ப்ரோ கோடு என்கிற பெயரை படத்தின் டைட்டிலாக பயன்படுத்தக் கூடாது என்று ப்ரோ கோட் என்கிற பெயரில் ஆல்கஹால் தயாரித்து விற்கும் ஒரு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த பெயரை டைட்டிலாக பயன்படுத்துவதில் ரவிக்கு தடை இல்லை என்று தீர்ப்பளித்து இருந்த நிலையில் இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சம்பந்தப்பட்ட நிறுவனம். இதையடுத்து இந்த படத்தின் டைட்டிலை ரவி பயன்படுத்தக் கூடாது என இடைக்கால தடை விதித்துள்ளது டில்லி உயர் நீதிமன்றம்
இந்த நிலையில் ரவி தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட விளக்கத்தில், “சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஆல்கஹால் தயாரிப்புகளை படத்தில் விளம்பரப்படுத்தச் சொல்லி வற்புறுத்தினார்கள். அது ஏற்றுக் கொள்ள முடியாதது. அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதனை தொடர்ந்து தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருந்தாலும் நவம்பர் 21க்கு பிறகு இது குறித்து ஒரு நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.