இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

இலங்கை தமிழ் தாய்க்கும், மலையாள தந்தைக்கும் மகனாக பிறந்த வேடன் என்கிற ஹிரன்தாஸ் முரளி. தற்போது கேரள மாநில இளைஞர்கள் கொண்டாடும் பாப் மற்றும் கானா பாடகராக இருக்கிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். ‛மஞ்சும்மல் பாய்ஸ், நரிவேட்ட' உள்ளிட்ட சில படங்களிலும் பாடி உள்ளார். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் படத்தின் மூலம் தமிழுக்கும் வர இருக்கிறார்.
இந்த நிலையில் வேடன் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. இளம் பெண் டாக்டர் ஒருவர் கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில் வேடன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் பேரில் கொச்சி திருக்காக்கரா போலீசார் வேடன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தற்போது மேலும் 2 பெண்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இசை குறித்து ஆராய்ச்சி செய்வதாக கூறி கொச்சிக்கு வரவழைத்து வேடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவரும், வேடன் இசை நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட தன்னை, பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக மற்றொருவரும் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் வேடன் போதை மருந்து பயன்படுத்திய ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. தொடரும் பாலியல் புகார்கள் குறித்து வேடனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




