ராஷ்மிகா, கிரித்தி சனோன் படம் லெஸ்பியன் கதை இல்லை : இயக்குனர் விளக்கம் | ரவீணா டான்டன் தாயார் வீட்டில் 25 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு | சல்மான்கான் அனுப்பிய லீகல் நோட்டீஸ் ; 'காலா ஹிரண்' இயக்குனர் பதிலடி | இளையராஜாவின் பத்து.... தமிழ் திரை இசையின் முத்து... | நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம் | நான் உயிருடன் தான் இருக்கிறேன் ; வீடியோ வெளியிட்ட மம்முட்டி பட நாயகி | தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறாரா மாரி செல்வராஜ்? | 'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா | ஹிப்ஹாப் ஆதி தயாரித்த “பொருநை” ஆவணப்படம்: சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு | 'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள் |

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாக இருக்கும் படம் ‛தி ராஜா சாப்'. இயக்குனர் மாருதி டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்த படத்தில் நித்தி அகர்வால், மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்துள்ள பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவியது.
இதனை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ள தயாரிப்பு நிறுவனம், “ஜூலை ஷெட்யூலுக்கான பணப்பட்டுவாடா தாமதமாகி இருக்கிறது என்பதை நாங்களே ஒப்புக்கொள்கிறோம். இது சமீபத்தில் திடீரென ஏற்பட்ட ஸ்ட்ரைக் காரணமாக ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் ஏற்பட்ட தாமதம் தான். கடந்த 12 மாதங்களில் நாங்கள் தினசரி கூலி தொழிலாளர்களுக்காக 60 கோடி ரூபாய் வரை சம்பளமாக கொடுத்திருக்கிறோம். இன்னும் ஒரு கோடி மட்டுமே பாக்கி இருக்கிறது. தற்போது போராட்டத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு ஏற்படப் போகும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த வாரத்திலேயே அந்தத் தொகையையும் கொடுத்துவிட தீர்மானித்துள்ளோம். ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்களது கடின உழைப்புக்கான தொகை கவுரவத்துடன் சென்று சேர வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.




