தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
இந்தியத் திரைப்படங்கள் அவ்வப்போது ஜப்பான் நாட்டிலும் வெளியாவது வழக்கம். ஹிந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்கள் சிலவற்றை அங்குள்ள ஜப்பான் சினிமா ரசிகர்களும் ரசித்துப் பார்க்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் பலர் நடிப்பில் 2021ல் வெளியான திரைப்படம் 'மாநாடு'.
'டைம் லூப்' சிக்கலில் மாட்டிக் கொண்ட கதாநாயகன் பற்றிய கதையில் மிகவும் பரபரப்பான திரைக்கதை கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. 100 கோடி வசூலையும் கடந்தது.
இப்படத்தை மே 2ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியிடுகிறார்கள். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். 'மாநாடு' தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.