ஒரு ஆணை நிம்மதியாக வாழ விடுங்கள் : ரவி மோகன் பதிவு வைரல் | ஜனநாயகனுக்கு எதிராக விநியோகஸ்தர்கள்: பணத்தை திரும்பி கேட்கிறார்களா? | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'துரந்தர் 2' டிரைலர் | போர்சூழல் எதிரொலி : செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் வெளியிட தடை | தமிழில் நடிக்கும் குஷி ரவி | கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா | செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' |

மலையாளியாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ரகுவரன். ஹீரோ, வில்லன், குணசித்ரம் என எல்லா வகையான நடிப்பிலும் தனக்கென தனி பாணியை கடை பிடித்தவர். நடிகை ரோகினியை திருமணம் செய்து, ஒரு மகனை பெற்று, பின்னர் அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்தவர்.
ரகுவரனின் வாழ்க்கையை மலையாள சினிமாவின் புகைப்பட கலைஞர் ஹாசிப் அபிதா ஹகீம் என்பவர் டாக்குமெண்டரியாக உருவாக்கி வருகிறார். இதற்கு 'ரகுவரன்: காலத்தை வென்ற கலைஞன்' என்று டைட்டில் வைத்துள்ளனர். ஏ.எச் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ரகுவரனின் சாயலை கொண்ட அதுல்ஷரே என்பர் ரகுவரனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில், ரோகிணி எழுத்தாளர் இந்துமதி, நிழல்கள் ரவி, ரகுவரனின் அம்மா, சகோதரர், மகன் ரிஷி ஆகியோர் ரகுவரன் குறித்து பேசி இருக்கிறார்கள். இந்த படத்தில் 60 சதவிகிதம் ரகுவரன் நேரடியாக தோன்றும் இதுவரை வெளிவராத வீடியோ காட்சிகள் இடம்பெறுகிறது. ரஜினியின் பேட்டிக்காக படக்குழு காத்திருக்கிறது. ரஜினி பேட்டி கிடைத்ததும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.