ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு | பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்? | 'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் | மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ் | 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி | உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி' | 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!! | டபுள் பிளாக்பஸ்டர் ஆன 'திரிஷ்யம் 3' | இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம் | முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா |

ஜெய்ப்பூர் அரண்மனையில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணத்திரைக் காவியம் என்ற பெருமிதத்தோடு வெளிவந்த திரைப்படம்தான் “அடிமைப் பெண்”. எம் ஜி ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், எம் ஜி ஆர் நாயகனாக நடித்து, இயக்குநர் கே சங்கர் அதிக பொருட் செலவில் இயக்கிய திரைப்படமாக அமைந்தது இத்திரைப்படம். இதன் வெளிப்புறப் படப்பிடிப்பின் ஒரு பகுதியாக ஜெய்ப்பூர் அரண்மனையை தேர்வு செய்திருந்தனர் படக்குழுவினர். ஜெய்ப்பூர் அரண்மனையில் அதுவரை யாரும் படம் பிடிக்க இயலாத இடங்களில் எல்லாம் “அடிமைப் பெண்” திரைப்படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டு அன்றே பெரும் சாதனை புரிந்திருந்தனர். சாதாரணமாக அரண்மனை போல ஸ்டூடியோவிற்கு வெளியே பிரமாண்ட செட் ஒன்றை அமைத்துத்தான் படமாக்குவது வழக்கம். ஆனால் எம் ஜி ஆர் அதற்கும் ஒருபடி மேலேயே சென்று சாதித்திருந்தார் என்றால் அது மிகையன்று.
ஜெய்ப்பூர் அரண்மனைக்குள்ளேயே மற்றொரு அரண்மனை பகுதியை தன்னுடன் வந்த கலைஞர்களைக் கொண்டே கட்டவும் செய்திருந்தார் எம் ஜி ஆர். இத்திரைப்படத்திற்காக ஆயிரம் ஒட்டகங்களை வாடகை;கு அமர்த்தி, ஒவ்வொரு ஒட்டகத்திற்கும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதமும், ஒட்டகம் ஓட்டி ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதம் என சம்பளம் கொடுக்கப்பட்டதோடு, மனித உணவு மற்றும் ஒட்டங்களின் உணவு என ஒவ்வொரு நாளும் இதற்காக பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் வாடகையாகவும், சவாரி செய்பவர்களுக்கென தனிச்சாப்பாடு என்று அனைத்து செலவினங்களையும் ஏற்றிருந்தது “எம் ஜி ஆர் பிக்சர்ஸ்”.
இன்றைய “பாகுபலி” திரைப்படத்தின் முன்னோடியாக பார்க்கப்படும் இத்திரைப்படம், 1969ஆம் ஆண்டு வெளிவந்தது. மற்ற ராஜா ராணி திரைப்படங்களிலிருந்து இத்திரைப்படத்திற்கென ஒரு தனிச்சிறப்பும் உண்டு. பேச்சுத் தமிழில் வெளிவந்த முதல் ராஜா ராணி திரைப்படம் என்ற அடையாளத்தோடு வெளிவந்த திரைப்படமாகவும் அறியப்படுவதுதான் இந்த “அடிமைப் பெண்” திரைப்படம்.




