
விமர்சனங்களை கவனித்து மாற்றம் செய்து கொள்வேன்: யுவன் சங்கர் ராஜா
இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த முறை சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, எனக்கும், ரசிகர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விரும்பினேன். அதனால் 360 டிகிரி மேடையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த புது அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன்.
எனது இசை பயணத்தில் நான் பிசியாக இருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் என் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். என்னை பற்றி வரும் விமர்சனங்களை இலகுவாக எடுத்துக் கொள்வேன். அவற்றை கவனிப்பேன். என்னுடைய பாடல்கள் எல்லாமே ஹிட்டாவதில்லை. மக்களுக்கு சில பாடல்கள் பிடிக்காமல் போகிறது. அது ஏன் என்பதை விமர்சனங்கள், ரசிகர்களின் கமெண்டுகள் மூலம் அறிந்து கொண்டு என்னை மாற்றிக் கொள்வேன். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!