ஒளிப்பதிவாளரைத் தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் கார் பரிசளித்த சூர்யா | 'கட்டா குஸ்தி 2' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்! | தனுஷ் 55வது படத்தில் 'கருப்பு' பட நடிகர்! | தனுஷ் அரசியலுக்கு வருவாரா இயக்குனர் கஸ்தூரிராஜா சொன்ன பதில் | 'கருப்பு' ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா | மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன் | 'ஜனநாயகன்' பிரச்னை.. எனக்கு சொல்ல தைரியமில்லை: எச்.வினோத் ஓபன் டாக் | பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார் | ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில் | விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்' |

இயக்குனர் பாண்டிராஜ் கடைசியாக சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தை இயக்கினார். வியாபார ரீதியாக சரியாக போகாத, அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. அதற்கடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான வேலைகள் மேற்கொண்டு நடக்கவில்லை.
இதனிடையே, நடிகர் ஜெயம் ரவியிடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். அந்தக் கதை ரவிக்குப் பிடித்துவிடவே அதை தனது மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமாரிடம் தெரிவித்திருக்கிறார். 'சைரன்' பட நஷ்டத்திற்காக அவர்களுக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்துத் தருவதாக சொல்லியிருந்தாராம் ரவி. அவர்களும் இந்த புதிய கூட்டணிக்கு சம்மதம் சொல்லியிருக்கிறார்கள்.
ஜெயம் ரவி தற்போது 'ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரது அண்ணன் இயக்கத்தில் 'தனி ஒருவன் 2' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளது. எனவே, பாண்டிராஜ் படத்தை உடனடியாக ஆரம்பிக்க உள்ளார்களாம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.




