இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளடக்கிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களை அதிக அளவில் பங்கு பெற வைக்க வேண்டும் என்பது குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‛‛பெண்களிடம் பெரிய அளவில் சக்தி உள்ளது. ஐந்து ஆண்கள் செய்யக்கூடிய வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்தாலும் அவரை அங்கு கொண்டு சேர்த்தது ஒரு பெண்தான். அக்னி மிஸைல் முதல் இஸ்ரோ வரை பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக என்னை சுற்றி இருக்கும் பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். பெண்களால் முடியாதது எதுவுமில்லை. என்றாலும் பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது. பெண்களை இன்னும் மேலே கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்று பேசி இருக்கிறார் சூர்யா.




