மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதன் தலைவராக தேனாண்டாள் முரளி உள்ளார். இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று (ஏப்ரல் 30) காலை 9 மணிக்கு துவங்கிய 5 மணிக்கு முடிந்தது.
சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தலைவர் பதவிக்கு தற்போது பதவியில் உள்ள முரளி ராமசாமி, மற்றொரு அணியில் இருந்து மன்னன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணை தலைவர் பதவிக்கு அர்ச்சனா கல்பாத்தி, கலைப்புலி சேகரன், ராஜேஸ்வரி வேந்தன், தமிழ்குமரன் மற்றும் விடியல் ராஜூ; செயலர் பதவிக்கு பி.எல்.தேனப்பன், கமீலாநாசர், எஸ்.கதிரேசன், கே.கதிரேசன், ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களாக, 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்; இதற்கு, நடிகை தேவயானி உட்பட, 77 பேர் போட்டியில் உள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர். இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், பூர்ணிமா, சுஹாசினி, அமீர், சசிகுமார், ஆர்.கே.செல்வமணி, தாணு, ராதாரவி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், தேவயானி, ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்தனர். ஓட்டுகள் நாளை காலை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.




