'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

தமிழில் சாட்டை படத்தில் அறிமுகமானவர் மகிமா நம்பியார். பின்னர் அசுரகுரு, மகாமுனி, ஓ மை டாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரத்தம் என்ற படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்து வருகிறார். இதனை சி.எஸ்.அமுதன் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்து வாகனத்தின் திரும்பும்போது களைப்பால் மகிமா நம்பியார் அசந்து தூங்கியுள்ளார். வாயை திறந்தபடி அவர் தூங்கும் காட்சியை படம் எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். “ரத்தம் டீமின் கடும் உழைப்பு” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவை மகிமா நம்பியாருக்கு டேக் செய்துள்ளார்.
மகிமா நம்பியார் இந்தப் பதிவை பார்த்து "அய்யோ அசிங்கம், அவமானமாக போச்சு இனி நான் இந்தியா பக்கமே திரும்ப மாட்டேன்” என பதிவிட்டுள்ளார். மகிமா சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் “அவருடைய போட்டோவை பார்க்கும்போது என் போட்டோவை பார்ப்பது போல் உள்ளது” என விஜய் ஆண்டனி கூறி உள்ளார்.




