‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வெளிவந்த படம் 'ஜிகர்தண்டா'. இப்படம் வெளிவந்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதைப் பற்றிக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அறிவித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
'ஜிகர்தண்டா' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், 'இறைவி, மெர்க்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மஹான்' ஆகிய படங்கள் வெளிவந்தன. கடைசி இரண்டு படங்கள் ஓடிடியில் வெளிவந்ததால் வியாபார ரீதியாக அந்தப் படங்களைப் பற்றி அதிகம் பேச முடியாது. அதற்கு முன்பு வெளிவந்த படங்களில் 'பேட்ட' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது.
வேறு படம் எடுப்பதைக் காட்டிலும் பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்ற 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும் என கார்த்திக் நம்பிக்கை வைத்திருக்கிறார் போலிருக்கிறது. அப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பாகப் படத்தில் நடிப்பது யார் யார் என்ற அறிவிப்பை கார்த்திக் இன்னும் வெளியிடவில்லை.