'இதயம் முரளி' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது! | 'டான்-3'ல் இருந்து வெளியேறிய ரன்வீர் சிங் ; இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு | திருப்பதியில் தனுஷ் வழிபாடு : மகனை நடிகராக்குகிறாரா... | லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் படத்தில் ஷ்ரத்தா கபூர்? | இறுகப்பற்று படத்தினால் நடந்த நல்லது : விக்ரம் பிரபு நெகிழ்ச்சி | பிப்.,13ல் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியாக வாய்ப்பு | ரீ ரிலீஸ் ஆகும் சூர்யாவின் காக்க காக்க | மகளின் பள்ளி விழாவில் பங்கேற்க மேக்கப்பை கலைக்காமல் படப்பிடிப்பிலிருந்து ஓடி வந்த ஸ்ரேயா | காந்தாரா பாணியில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'கோரகஜ்ஜா' | எர்ணாகுளத்தப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறிய மம்முட்டி |

இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். டி.ராஜேந்தரின் மகனும், நடிகருமான சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்று அப்பாவின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று நலமான டி.ராஜேந்தர் அமெரிக்காவில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். அவருடன் மனைவி உஷா, மகன் குறளரசன் ஆகியோர் உடனிருந்து கவனித்து கொண்டனர்.
இந்நிலையில் முழுமையாக குணமாகி நாளை(ஜூலை 22) அதிகாலை சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர். பூரண நலம் பெற்றதை தொடர்ந்து வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும் கால்டுவெல் ஆகியோர் டி.ராஜேந்தரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மகன் குறளரசன், மகள் இலக்கியா உள்ளிட்ட குடும்பத்தாரும் அவருடன் நாடு திரும்புகின்றனர்.
சென்னை வந்த பின் முதலில் தனது சிகிச்சைக்காக உதவி செய்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி கூறுகிறார் டி.ராஜந்தர்.




