'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய 'கலைஞரின் கண்ணம்மா' என்ற படத்தை இயக்கி, தயாரித்தவர் பாபா விக்ரம். இந்த படத்தில் மீனா நாயகியாக நடித்திருந்தார். பிரேம்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இதுதவிர என் இதய ராணி, பொம்மை நாய்கள் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து, இயக்கி உள்ளார். கடைசியாக இமான் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் என்ற படத்தை இயக்கி வந்தார்.
83 வயதான பாபா விக்ரம், முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு அன்ன பாபா ஆலயம் என்ற பெயரில் சாய்பாபாவுக்கு ஓர் ஆலயத்தை நிறுவி வழிபாடு செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு லட்சுமி என்கிற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.




