சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

சென்னை : தியேட்டர்களில் படங்களை திரையிட வசூலிக்கப்படும் வி.பி.எப்., கட்டணம் தொடர்பான பேச்சில் தொடரும் இழுபறியால், பல தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தியேட்டர்களில் படங்களை திரையிட வசூலிக்கப்படும் வி.பி.எப்., கட்டணம் தொடர்பாக, அரசுத் துறை, தயாரிப்பாளர்கள், டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்குவோர் இடையே கடந்த வார இறுதியில் முத்தரப்பு பேச்சு நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி முடிவு காண திட்டமிடப்பட்டுள்ளது.
மாற்று வழி
இதுகுறித்து, தயாரிப்பாளர் சங்கத்தினர் கூறியதாவது: தியேட்டரில் விளம்பர வருவாய், கேன்டீன், பார்க்கிங் உள்ளிட்ட பல வகையில் வருமானம் வருகிறது. புரொஜக்டர்களுக்கான கட்டணத்தையும், தியேட்டர் உரிமையாளர்களே செலுத்த வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 125 கோடி ரூபாயை தயாரிப்பாளர்கள் செலுத்தியுள்ளனர். இனி நாங்கள் செலுத்த மாட்டோம் என்றனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் அண்ணாமலை உள்ளிட்டோர் கூறியதாவது : தமிழகத்தில் உள்ள 1,100 தியேட்டர்களுள், 200 தியேட்டர்களில் சொந்தமாக டிஜிட்டல் புரொஜக்டர்கள் உள்ளன. இந்த தொழில்நுட்பம் வந்தபோது, தயாரிப்பாளர்கள் வாடகை செலுத்துவதாக கூறியதால் தான், நாங்கள் சம்மதித்தோம். இப்போது கூறுவது போல, அன்றே கூறியிருந்தால் மாற்று வழியை யோசித்திருப்போம். நிலத்திற்கான விலை, ஐந்து வகையான வரி, தொழிலாளர்களுக்கான சம்பளம், மின்சார கட்டணம் என படம் திரையிட்டாலும், இல்லாவிட்டாலும் பல வகையிலும் செலவு இருக்கிறது. இதில், கேன்டீன், விளம்பர வருவாயில் தயாரிப்பாளர்களும் பங்கு கேட்டால், தியேட்டர்களை மூடி விட்டு செல்ல வேண்டியது தான்.
வருமானம் இல்லை
தமிழகத்தில் 2,000 ஆக இருந்த தியேட்டர்கள் எண்ணிக்கை இன்று பாதியாகி விட்டது. அதிலும், தற்போது பாதி தியேட்டர்கள் பெருமைக்கு தான் நடக்கின்றன; போதிய வருமானம் இல்லை. தயாரிப்பு செலவை குறைத்தாலே தயாரிப்பாளர்களுக்கான பாரம் பெரிதும் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.




