இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து அவரது புதிய படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக இது உருவாகிறது. இந்தப்படத்தின் கதை குறித்தும் படத்தின் அப்டேட் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் வம்சி, ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
“நான் விஜய்யின் எளிமையை ரசிப்பவன்.. ஆனால் இந்தப்படத்தின் கதையை விஜய்க்கு இருக்கும் மாஸ் பவரை மனதில் வைத்தே உருவாக்கியுள்ளேன்.. அதேசமயம் இது அரசியல் படமல்ல.. படம் முழுதும் உணர்ச்சிகரமாக இருக்கும். அடுத்த மாதம் இறுதியில் இருந்து படம் குறித்த அப்டேட் தகவல்கள் உங்களை தேடி வரும்.. அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்” என கூறியுள்ளார் வம்சி பைடிப்பள்ளி.




