தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

கேரளாவில் கடந்த ஜூலை-17 முதல் சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனாலும் சில பெரிய படங்கள் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு கிளம்பிச் சென்றுவிட்டன. அதேசமயம் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் டொவினோ தாமஸ் தற்போது சூப்பர் ஹீரோ கதையாக உருவாகி வரும் மின்னல் முரளி என்கிற படத்தில் நடித்து வருகிறார்..
இந்தநிலையில் தற்போது கேரளாவின் தொடுபுழா அருகில் உள்ள குமாரமங்கலம் பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்கி நடத்த ஆரம்பித்தனர். ஆனால் கொரோனா தாக்கம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பகுதி என்பதால், அந்தப்பகுதி மக்கள் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முதலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்த போலீஸார் பின்னர் அதை திரும்ப பெற்றனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் கொரோனா முதல் அலை துவங்கியபோதே பாதியில் நின்றது. அந்த சமயத்தில் தான் இந்தப்படத்திற்காக போடப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள சர்ச் செட்டை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.