எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? | 98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' | மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? | ஆன்லைன் மோதல், ரசிகர்கள் சண்டை வேண்டாம் - பவன் கல்யாண் அட்வைஸ் | 10 நாட்கள் நடித்த நிலையில் கமல் வெளியேறியதால் நின்று போன படம் ; இயக்குனர் பாலச்சந்திர மேனன் புது தகவல் | ‛மகாராஜா 2' கதை தயார் ; உறுதிப்படுத்திய விஜய்சேதுபதி | இரண்டாவதாக பெண் குழந்தை பெற்ற பூர்ணா ; பிறந்த நாளன்றே பெயரும் சூட்டினார் | ‛ஆடுஜீவிதம்' இயக்குனர் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட மோகன்லால் நெகிழ்ச்சி |

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்ற விவசாயி கலந்து கொண்டுள்ளார். இவர் தன் உடலில் கிலோ கணக்கில் நகை அணிந்து கொண்டு திரிவதன் மூலம் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சியில் அவர் புலி பல்லால் செய்யப்பட்ட டாலர் ஒன்றை அணிந்துள்ளார்.
அதை நிஜமான புலி பல் தான் என்று வெளிப்படையாகவும் நிகழ்ச்சியில் பேசி வந்தார். புலி பல் வாங்குவதோ, விற்பதோ, வைத்திருப்பதோ இந்திய வன பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இதனால் இதுகுறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் புகார் செய்யவே கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகளும், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் காவல் நிலைய அதிகாரிகளுகம் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவர், பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்து ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




