சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்கிற பெயரில் சோசியல் மீடியாவில் அவ்வப்போது பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். திரையுலக பிரபலங்களை பொறுத்தவரை தங்களது பிறந்த நாளிலோ அல்லது தங்களது படங்கள் ரிலீசாகும் சமயத்திலோ இதுபோன்று மரக்கன்றுகள் நட்டு தங்களது சக நடிகர் நடிகைகளுக்கு சவால் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் தற்போது நடிகர் துல்கர் சல்மான், தான் நடித்து பான் இந்தியா படமாக நாளை வெளியாக உள்ள குருப் என்கிற படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள அவர் தனது இன்னொரு படமான ஹே ஷினாமிகா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி விடுத்துள்ள மரம் நடும் சவாலை ஏற்று அங்கே மரக்கன்றுகளை நட்டு கிரீன் இந்தியா சேலஞ்ச் பிரச்சாரத்தை ரசிகர்களிடம் மீண்டும் துவக்கியுள்ளார்.
எண்பதுகளில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய குருப் என்கிற கொலைகாரனை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. துல்கர் சல்மானை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.