இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கருப்பு நிற ஆடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்திருந்த புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலானது. ஆனால் ஏற்கனவே நடிகை தீபிகா படுகோனே வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்றில் இதேபோன்ற உடையை அணிந்திருந்ததாக குறிப்பிட்டு, இரண்டும் ஒன்று போலவே இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால் இந்த ஒப்பீட்டை விரும்பாத பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா, உடனடியாக இதற்கு பதில் கொடுத்திருக்கிறார். அதாவது, “பார்வை இல்லாதவர்கள் தான் இந்த இரண்டு உடைகளும் ஒரே மாதிரி இருப்பதாக கூறுவார்கள். தவிர பிரியங்கா எப்போதுமே உயர்தரமான சிறந்த ஆடைகளையே அணிவார்” என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் தீபிகா படுகோனின் ஆடையை மறைமுகமாக மட்டம் தட்டி பேசியிருக்கிறார். தனது இந்த கருத்தை தொடர்ந்து நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் மீரா சோப்ரா.