'சரோஜா' படத்தில் தவறு… இப்போது கண்டுபிடித்த ரசிகர் | கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி | மறு உத்தரவு வரும் வரை கேரளா ஸ்டோரி 2 ரிலீஸை நிறுத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம் | கேரளாவில் முதன்முறையாக பஞ்சாயத்து நிர்வாகத்தால் கட்டப்பட்ட தியேட்டர் : பாவனா திறந்து வைக்கிறார் | தடை செய்யப்பட்ட துரந்தர் படம் பார்ப்பதற்காகவே இந்தியா வந்தார்கள் : ரசிகர்கள் மீது மாதவன் நம்பிக்கை | 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கும் மாதுரி ஜெயின் | அனுபமாவை மட்டன் சாப்பிடுவதையே நிறுத்த வைத்த அதிர்ச்சி சம்பவம் | தமிழில் இடைவெளி இல்லை: பிரியங்கா மோகன் | அம்மா மாதிரி வருவேன்: குஷ்பு மகள் நம்பிக்கை | 'ப்ரோ கோட்' டைட்டில் வழக்கை வாபஸ் பெற்றார் ரவி மோகன் |

கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் காஷ்மீர் பைல்ஸ். இந்த படத்தை விவேக் அக்னிஹோத்ரி என்பவர் இயக்கியிருந்தார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.. அதனாலேயே பாலிவுட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படம் இன்று தியேட்டர்களில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது
காஷ்மீரில் கடந்த 1990-ல் கிட்டத்தட்ட 32 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதின் நினைவு தினமான இன்று (ஜன-19 ) இந்த படத்தை மீண்டும் வெளியிடுவது சரியானதாக இருக்கும் என்பதாலேயே இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளதாக இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளார். இந்த படத்தை தியேட்டரில் பார்க்காமல் மிஸ் பண்ணியவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ள இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, ஒரு படம் வெளியான ஒரு வருடத்திற்குள்ளேயே இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்யப்படும் சாதனையையும் காஷ்மீர் பைல்ஸ் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.