சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழகத்தின் அடுத்த தலைமுறை பாடகர்களை தேடும் சரிகமப சாலஞ்ச் 2012 நிகழ்ச்சி, இறுதிச் சுற்றை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் பரத்வாஜ், உன்னிமேனன், ரைஹானா, ஹரிஷ் ராகவேந்திரா, பிரசாந்தினி, மோகன் வைத்தியா உள்ளிட்டவர்களை நடுவர்களாக கொண்டு நடைபெற்று வரும் இப்போட்டி நிகழ்ச்சியில், தற்போது தமிழகம் முழுவதிலுமிருந்து தலை சிறந்த 7 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த 7 போட்டியாளர்களும் கோவை மாநகரில் அமைந்துள்ள பன் ரிபப்ளிக் மாலிலும், 16-ம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மாலிலும் கலந்து கொள்கிறார்கள். தேர்வாகும் ஐந்து போட்டியாளர்களும் நேரடியாக மக்களின் முன்னிலையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இசை உலகின் ஜாம்பவான்கள் முன்னிலையில் விரைவில் நடைபெறும். இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் போட்டியாளர் ஒருவருக்கு சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்பு நிச்சயம். பரபரப்பான தருணத்தை அடைந்திருக்கும் ‘சரிகமப’ நிகழ்ச்சி, வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.