பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நந்தினி தொடரில் வில்லனாக நடித்தவர் கிரண் ஆர்யா. தற்போது சினிமாவில் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ஒரு குப்பை கதை படத்தில் வில்லனாக நடித்தவர், அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் ஹிப் ஆப் தமிழா ஆதி, இயக்கி, நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மேலும் இரண்டு படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனக்கு சொந்த ஊர் பெங்களூர். சிறு வயதாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஏன் என்றால் என் சித்தப்பா ஒரு இயக்குனர். அப்போதிலிருந்தே சினிமா மீது காதல். கல்லூரி படிப்பை முடித்து சொந்தமாக ஒரு தொழில் துவங்கி வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது என் நண்பர் குறும்படத்தில் நடிக்க வைத்தார் அப்போதிருந்து என் சினிமா வாழ்க்கை ஆரம்பமாகி விட்டது.
பிறகு தகடு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். பிறகு பாலுமகேந்திராவின் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்று வந்தேன். அப்போது அங்கு பார்த்த இயக்குனர் காளி ரங்கசாமி, என்னை ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லன் காதபாத்திரத்தில் நடிக்க வைத்தார். படத்தில் என்னை நம்பி பெரிய கதாபாத்திரம் கொடுத்தார். அதன்பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நந்தினி தொடர் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டே சினிமாவிலும் வில்லனாக நடிப்பேன். ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதே லட்சியம் என்கிறார் கிரண் ஆர்யா.