மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறவர் ஸ்ரீதேவி. இவரது வில்லத்தனத்துக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீதேவி, தனது மாநிலத்தைச் சேர்ந்த போட்டோகிராபரை சத்தமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
அவர் பெயர் அசோக் சிந்தாலா. பெங்களூரில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார். என்றாலும் செல்லப் பிராணிகளை படம்பிடிப்பதில் நிபுணர். இவரைப் பற்றி பேஸ்புக்கில் அறிந்து கொண்ட ஸ்ரீதேவி, தனது வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளை படம் எடுக்க அழைத்துள்ளார். அவரும் வந்துள்ளார். இந்த சந்திப்பு காதலாக மலர சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆந்திர பாரம்பரியப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஸ்ரீதேவி.