ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜீ தமிழ் சேனலில் சரிகமப என்ற பெயரில் பிரமாண்ட இசை போட்டி நிகழ்ச்சி நடந்தது. கடந்த வாரம் அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் வருகிற 6ந் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக கடந்த 4 மாதங்களாக குரல் தேர்வு நடந்து வந்தது. இதில் 5 முதல் 14 வரையிலான சிறுவர்கள் கலந்து கொள்கிறார்கள். இரண்டாவது சீசன் முழுவதும் சிறுவர்களுக்கானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனிலும் பாடகி சுஜாதா, பாடகர்கள் கார்த்திக், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் நடுவர்களாக இருக்கிறார்கள். நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக கிராமப்புற குழந்தைகளுக்கும், வெளிநாட்டு வாழ் தமிழர்களின் குழந்தைக்கும் முக்கியத்தும் தரப்படுகிறது.