ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் டி.வி திரைப்பட தரத்துக்கு தொடர்களை தயாரித்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வந்தாள் ஸ்ரீதேவி தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
பொதுவான சின்னத்திரை சீரியல் நடிகைகள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வந்தாள் ஸ்ரீதேவி தொடரின் நாயகி அனன்யா சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்திருக்கிறார். ஹீரோயின்களை இயற்கையான சூழுலில் ஆடவிட்டு படம்பிடிக்க சினிமா உலகம் மசினகுடிக்கு செல்லும், அந்த மசினகுடியில் இருந்து வந்திருக்கிறார் ஸ்ரீதேவி. அப்பா ஊட்டியில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றுகிறார்.
சென்னையில் படித்தவருக்கு அப்படியே மீடியாக்கள் பக்கம் கவனம் திரும்ப பல சினிமா ஆடிசன்களில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு சாருஹாசன் தாதாவாக நடிக்கும் தா தா 87 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் வந்தாள் ஸ்ரீதேவி ஆடிசனில் கலந்து கொண்டு அதிலும் தேர்வாகி இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். தா தா 87 படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் சினிமா நடிகையாக புகழ்பெற வேண்டும் என்பதே அனன்யாவின் ஆசை.