விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சமீபத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது அவருக்கு பெண் தேடும் ஒரு நிகழ்ச்சியாகும். 16 இளம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஆர்யாவுடன் கலந்து பேசி அவரது மனதை கவர வேண்டும். இறுதியில் தனக்கு பிடித்தமான பெண்ணை ஆர்யா மணந்து கொள்வார் என்பது அந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
இதன் பிடிப்புகள், தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் யாழ்பாணத்தில் உள்ள பழம்பெரும் தமிழ் நூலகத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நூலகத்திற்கு சென்ற பொதுமக்களை படக்குழுவினர் தடுத்து நிறுத்தியதாகவும், நூலகத்தின் அமைதியை கெடுத்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
அதோடு நூலகத்தின் வெளியே படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுவிட்டு உள்ளே படப்பிடிப்பு நடத்தியதாக யாழ்பாண நகராட்சி ஆணையரும் கூறியுள்ளார். இதனால் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது. படிப்பிடிப்பை வேறு இடத்தில் வைத்துக் கொள்ள படப்பிடிப்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.