ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொறியாளருக்கு படித்து விட்டு தொகுப்பாளினி ஆனவர் சுவதிஷ்டா. சென்னை பொண்ணு. பல சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிவர் திடீரென்று சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தன்னை பேட்டி எடுத்தவரை அப்படியே சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார் மிஷ்கின்.
சவரக்கத்தி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கிறார். அடுத்து ஜீவாவுடன் கீ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் மதம் என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படங்களின் வருகைக்கு பிறகு சினிமாவில் பிசியாக நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
இதற்கிடையில் ஆபாயில் என்ற வெப் சீரியலில் நடித்து அதிலும் பாப்புலராகி விட்டார். இனி தொகுப்பாளினி வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு சினிமாவிலும், வெப் சீரியல்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் சுவதிஷ்டா.