கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

விஜய் தொலைக்காட்சி புராணத் தொடர்களுக்கு முக்கியத்தும் தரும் அதே நேரத்தில் குடும்பத் தொடர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வந்திருக்கிறது கல்யாணமாம் கல்யாணம். நேற்று முதல் இந்த புதிய தொடர் ஒளிபரப்பை தொடங்கி உள்ளது. இதில் 7சி தொடரில் நடித்த ஸ்ரீத்து ஹீரோயின் கமலியாக நடிக்கிறார், அவருக்கு ஜோடி சூர்யாவாக தேஜா நடிக்கிறார். பிரபல இயக்குனர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜ், மவுலி ஆகியோரும் நடிக்கிறார்கள். பிரம்மா இயக்குகிறார். தொடரின் கதை இதுதான்.
கமலி, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண். உறவுகள் நிறைந்த குடும்ப வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். திருமணம் மற்றும் சடங்குகள் மீது அதீத நம்பிக்கையுடன் இருப்பவர். ஆனால், நாயகன் சூர்யாவோ பணக்கார வீட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்யாண வாழ்க்கையில் துளி கூட நம்பிக்கை இல்லாதவர். எப்போதும் பேஸ்புக் டுவிட்டர், பிசினஸ் என வாழ்கிறவர். பெண் பார்க்கும் படலத்திலேயே டைவர்சுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்.
கமலியின் எளிமைக் குணத்தைக் கண்டு வியக்கும் சூர்யாவின் தாத்தா, அவனுக்கு கமலியைத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். திருமணத்தில் விருப்பமே இல்லாமல் இருக்கும் சூர்யா இதற்கு சம்மதிப்பாரா? சூர்யா, கமலி இடையே திருமணம் நடக்குமா? திருமணத்திற்கு பிறகு என்னென்ன நடக்கும் என்பது தான் தொடரின் கதை.