விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ஜூலியும் 4 பேரும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆலியா மானசா. தற்போது ராஜா ராணி தொடரில் நடித்து வருகிறார். பணக்கார வீட்டுக்கு வேலைக்காரியாக சென்று அந்த வீட்டின் செல்லப்பிள்ளை சஞ்சயை எதிர்பாராதவிதமாக திருமணம் செய்து மருமகளாகிறார்.
ஆலியாவை துரத்த அந்த குடும்பத்தினர் செய்யும் சதியும், அதிலிருந்து அவர் தப்பிப்பதும் தான் கதை. ஆல்யா நடிக்கும் செம்பா கேரக்டர் பெண்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் ஆலியா மானசாவுக்கும், சேனலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் ராஜா ராணியிலிருந்து விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனை மறுத்து ஆலியா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நான் நடிக்கும் ராஜா ராணி சீரியல் பற்றி தவறான தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. நான் ராஜா ராணியை விட்டு விலக மாட்டேன். அந்த தொடரில் நடிப்பது பிடித்திருக்கிறது. இறுதி வரை தொடர்ந்து நடிப்பேன். உங்கள் அன்புக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.