பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பங்கேற்று புகழ் பெற்றவர் ஜூலி. இதில் இவருக்கு கிடைத்த பெயரும், புகழும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் அமுங்கி விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் எல்லோருடனும் சகஜமாய் இருந்த ஜூலில பின்னர் பொய் பேசுகிறார், நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் ஓவியா விஷயத்தில் இவரது பெயர் மேலும் மங்கியது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆனால், அவைகள் எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை அந்த போட்டியில் நிலை நிறுத்தி கொள்ள சிலரோடு சேர்ந்து கொண்டு அப்படி அவர் செய்ய வேண்டியதாகி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் தான் தன் மீதான தவறுகளை உணர்ந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதன்பின்னர் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இப்போது தொகுப்பாளியாக களமிறங்கியுள்ளார்.
கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக வருகிறது. இதன் 6வது சீசன் தற்போது துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை ஜூலி தான் தொகுத்து வழங்க போகிறார். நடன இயக்குநர் கலா மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாகப் பங்கேற்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.