ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரையில் பல சீரியல்களில் நாயகனாக, வில்லனாக நடித்து வருபவர் ஈஸ்வர். கல்யாண பரிசு, கல்யாணம் முதல் காதல் வரை சீரியல்களைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் தனது வேடம் பற்றி ஈஸ்வர் கூறுகையில், இதற்கு முன்பு பல சீரியல்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த ராஜாராணி தொடரில் முதன்முறையாக நான் அப்பாவித்தனமான கணவனாக நடிக்கிறேன். அது ஒரு காமெடி கலந்த கேரக்டர். இப்படி நடிப்பது புதுமையான அனுபவமாக உள்ளது. எனக்குள் இருந்த காமெடியனை இந்த சீரியலில் வெளியில் எடுத்து விட்டிருக்கிறேன்.
நான் நடிகர் விவேக்கின் தீவிரமான ரசிகன். அவர் சமூக நோக்கமுள்ள காமெடி காட்சிகளில் நிறைய நடித்திருக்கிறார். அதனால் அவர் மாதிரி காமெடியிலும் நல்ல கருத்துக்களை கலந்து செய்ய ஆசைப்படுகிறேன். முன்பெல்லாம் சீரியல்களில் குடும்பப் பிரச்சினைகள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது மாறி வருகிறது. சீரியல்களிலும் பாடல், சண்டை காட்சி, காமெடி என புதுமை செய்து வருகிறார்கள். இது வரவேற்க வேண்டிய விசயம்.
இப்படி சீரியல்களின் தன்மை மாறுவது நேயர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். அதோடு, அழுது வடியும் காட்சிகளாக மட்டுமே இல்லாமல் சிரித்து மகிழும் காமெடி காட்சிகள் சீரியல்களில் நிறைய இடம்பெற வேண்டும். அந்த வகையில், இந்த ராஜா ராணி சீரியலில் மனைவிக்கு பயந்த அப்பாவி கணவனாக நடிப்பது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதோடு, என்னை பாசிட்டிவ், நெகடிவ் வேடங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட நேயர்கள், இந்த வேடத்துக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அந்த வகையில், இந்த கதாபாத்திரம் எனக்கு நல்ல ரீச் கொடுத்திருக்கிறது.
அதனால் எதிர்காலத்தில் ஒரே மாதிரியான இல்லாமல் இந்த மாதிரி மாறுபட்ட பர்பாமென்ஸை வெளிப்படுத்தும் வேடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்கப்போகிறேன் என்கிறார் ஈஸ்வர்.