ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். தாரைத்தப்பட்டை, மருது போன்ற படங்களில் வில்லனாக நடித்த அவர், தற்போது தனிமுகம், பில்லா பாண்டி, வேட்டை நாய், காக்க உள்பட பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷ்க்கும், சுமங்கலி சீரியல் நாயகி திவ்யாவுக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள் ளது. அக்டோபர் மாதம் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
இதுபற்றி சுமங்கலி திவ்யா கூறுகையில், எங்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. இப்போது தமிழுக்கு புரட்டாசி மாதமாக இருப்பதால் ஐப்பசியில் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணம் நடைபெற உள்ளது. இன்னும் தேதி முடிவாகவில்லை. மேலும், எங்களது திருமணம் காதல் திருமணமல்ல. பெற்றோரால் நிச்சயப்பட்ட திருமணம். ஆர்.கே.சுரேஷைப்போன்று எனது சொந்த ஊரும் ராமநாதபுரம்தான். அவரது ஊருக்கு அருகில் எனது ஊர் உள்ளது.
மேலும், இப்போது நான் அடங்காதே படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அதேபோல் சுமங்கலி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறேன். ஆனால் இதன்பிறகு நான் சினிமா, சீரியல் என எதிலும் ஒப்பந்தமாக மாட்டேன். முழு நேர இல்லத்தரசியாகி விடுவேன். என்றாலும், சுமங்கலி சீரியலில் ஒப்பந்தம் இருப்பதால் சீரியல் முடிகிறவரை நடித்துக்கொடுப்பேன். அதன்பிறகு எந்த சீரியலிலும் கமிட்டாக மாட்டேன் என்கிறார் திவ்யா.