சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல சின்னத்திரை நடிகர் ராமச்சந்திரன். பல சீரியல்களில் வில்லனாக, குணசித்ர நடிகராக, காமெடியனாக நடித்து வரும் அவர், சின்னத்திரை நடிகர் கெளசிக் இயக்கிய பனிவிழும் நிலவு -என்ற படத்தில் ஒரு புரொபசர் வேடத்தில் நடித்தார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியிருக்கிறார்.
இதுகுறித்து ராமச்சந்திரன் கூறுகையில், சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்றுதான் நான் நடிக்க வந்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் சின்னத்திரைக்கு வந்தேன். அப்படி வந்து 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டேன். நிறைய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். விளைவு, இப்போது எந்தமாதிரியான கேரக்டர் என்றாலும் நடித்து ஸ்கோர் பண்ணக்கூடிய திறமையை வளர்த்துக்கொண்டுள்ளேன்.
தற்போது அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. சின்னத்திரை நடிகர்கள் பலரும் சினிமாவிலும் சாதித்து வருகிறார்கள். அதனால் நானும் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சி எடுத்து வருகிறேன். கூடிய சீக்கிரமே நான் நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளிவரும் என்று கூறும் ராமச்சந்திரன், சினிமாவில் பிசியாகி விட்டாலும், சீரியல்களில் நடிப்பதை விட மாட்டேன் என்கிறார்.