ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரையின் சகலகலாவல்லி என்று நிரஞ்சினியை தாராளமாக குறிப்பிடலாம். விமான பணிப்பெண், அழகுலை நிபுணர், ஆடை அலங்கார நிபுணர், மாடல் அழகி, நடிகை என இப்படி பல முகங்கள் அவருக்கு. விரைவில் இயக்குனர் என்ற புதிய முகத்தையும் காட்ட இருக்கிறார்.
அழகி சீரியலில் அறிமுகமான நிரஞ்சனி, அக்கா, பிரியமானவள் தொடர்களில் நடித்தார். தற்போது வாணி ராணி, நீலி தொடர்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது வரும் சினிமா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறார். சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தவர் இப்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
ஆனாலும் நிரஞ்சனிக்கு இயக்குனராகவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. "சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பது என்னோட நீண்ட நாள் கனவு. விஷ்காம் படிக்கும்போது சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய தெலுங்கு படத்தில் துணை இயக்குனராக வேலை செய்தேன். கைவசம் நிறைய ஸ்கிரிப்டுகள் இருக்கிறது. இப்போது சின்னத்திரை, சினிமாவில் நடிப்பில் பிசியாக இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது லைட்ஸ் ஆன்... கேமரா... ரெடி...ஆக்ஷன் சொல்வேன்" என்கிறார் நிரஞ்சனி.