மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு தொடரில் ஜோடியாக நடித்து வரும் அன்வரும், சமீராவும் நிஜத்திலும் காதலர்கள். தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே இருவரும் காதலர்கள். இருவருமே ஐதராபாத்தை சேர்ந்தவர்கள். இருவரும் இணைந்து தெலுங்கில் பல குறும்படங்களிலும், சில தொடர்களிலும் நடித்துள்ளனர். பகல்நிலவு தொடரில் முதலில் நடிக்க வந்தவர் அன்வர்தான். அதன்பிறகுதான் அவர் காதலி சமீராவையும் அழைத்து வந்தார்.
தற்போது இருவரும் இணைந்து ஒரு தொடரை தயாரிக்க இருக்கிறார்கள். ஜி மராட்டி சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்தி தொடரை ரெக்க கட்டி பறக்குது மனசு என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இதில் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. சமீரா மட்டுமே நடிக்கிறார். அன்வர் தயாரிப்பு பணிகளை மட்டுமே கவனிக்கிறார். தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஜீ தமிழ் சேனலில் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அன்வர் சமீரா திருமணம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது.