'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு தொடரில் ஜோடியாக நடித்து வரும் அன்வரும், சமீராவும் நிஜத்திலும் காதலர்கள். தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே இருவரும் காதலர்கள். இருவருமே ஐதராபாத்தை சேர்ந்தவர்கள். இருவரும் இணைந்து தெலுங்கில் பல குறும்படங்களிலும், சில தொடர்களிலும் நடித்துள்ளனர். பகல்நிலவு தொடரில் முதலில் நடிக்க வந்தவர் அன்வர்தான். அதன்பிறகுதான் அவர் காதலி சமீராவையும் அழைத்து வந்தார்.
தற்போது இருவரும் இணைந்து ஒரு தொடரை தயாரிக்க இருக்கிறார்கள். ஜி மராட்டி சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்தி தொடரை ரெக்க கட்டி பறக்குது மனசு என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இதில் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. சமீரா மட்டுமே நடிக்கிறார். அன்வர் தயாரிப்பு பணிகளை மட்டுமே கவனிக்கிறார். தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஜீ தமிழ் சேனலில் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அன்வர் சமீரா திருமணம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது.