ஐமேக்ஸில் வெளியாகும் வார் 2 | நியூமராலஜிபடி பெயரில் திருத்தம் செய்த மீனாட்சி சவுத்ரி | டெரரான கெட்டப்பில் ராஷ்மிகா : மைசா படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | ரஜினியின் கூலி படத்தின் ஹிந்தி டைட்டில் மாற்றம் | அஜித் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது | ஜீ 5 ஓடிடி மற்றும் ஜீ 5 தமிழ் டிவியி ஒளிபரப்பாகும் சூரியின் மாமன் | என் படங்களில் அஞ்சலியை தொடர்வது ஏன்? : இயக்குனர் ராம் | கில்லர் எனது கனவுப்படம் : மெக்சிகோவில் படப்பிடிப்பு நடத்தும் எஸ்.ஜே.சூர்யா | பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி |
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு தொடரில் ஜோடியாக நடித்து வரும் அன்வரும், சமீராவும் நிஜத்திலும் காதலர்கள். தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே இருவரும் காதலர்கள். இருவருமே ஐதராபாத்தை சேர்ந்தவர்கள். இருவரும் இணைந்து தெலுங்கில் பல குறும்படங்களிலும், சில தொடர்களிலும் நடித்துள்ளனர். பகல்நிலவு தொடரில் முதலில் நடிக்க வந்தவர் அன்வர்தான். அதன்பிறகுதான் அவர் காதலி சமீராவையும் அழைத்து வந்தார்.
தற்போது இருவரும் இணைந்து ஒரு தொடரை தயாரிக்க இருக்கிறார்கள். ஜி மராட்டி சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்தி தொடரை ரெக்க கட்டி பறக்குது மனசு என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இதில் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. சமீரா மட்டுமே நடிக்கிறார். அன்வர் தயாரிப்பு பணிகளை மட்டுமே கவனிக்கிறார். தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஜீ தமிழ் சேனலில் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அன்வர் சமீரா திருமணம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது.