பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
குழந்தைகளை மையமாக கொண்ட தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தொடர்ந்து விஜய் டி.வியும் குழந்தையை மையமாக கொண்ட கதையுடன் களம் இறங்குகிறது. கிராமத்து பெண் குழந்தையின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது மெளனராகம் தொடர்.
கிராமத்தில் பாடித் திரியும் அந்த குழந்தையின் தந்தை அதற்கு நினைவு வரும் முன்பே காணாமல் போகிறார். நினைவு வந்ததும் தன் தந்தையை தேடி அந்த சிறுமி பயணப்படுகிற கதை. அவள் தன் தந்தையை கண்டு பிடித்தாளா? இல்லையா என்பது கதையின் முடிவு. சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவள் தந்தையை தேடுகிற கதைக்களம் விரிவாக இருக்கும்.
தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்த தொடர் வருகிற 24ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. மெளனராகம் மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ரேவதி நடித்த வெள்ளி விழா படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.