தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
குழந்தைகளை மையமாக கொண்ட தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தொடர்ந்து விஜய் டி.வியும் குழந்தையை மையமாக கொண்ட கதையுடன் களம் இறங்குகிறது. கிராமத்து பெண் குழந்தையின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது மெளனராகம் தொடர்.
கிராமத்தில் பாடித் திரியும் அந்த குழந்தையின் தந்தை அதற்கு நினைவு வரும் முன்பே காணாமல் போகிறார். நினைவு வந்ததும் தன் தந்தையை தேடி அந்த சிறுமி பயணப்படுகிற கதை. அவள் தன் தந்தையை கண்டு பிடித்தாளா? இல்லையா என்பது கதையின் முடிவு. சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவள் தந்தையை தேடுகிற கதைக்களம் விரிவாக இருக்கும்.
தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்த தொடர் வருகிற 24ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. மெளனராகம் மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ரேவதி நடித்த வெள்ளி விழா படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.