பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
குழந்தைகளை மையமாக கொண்ட தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தொடர்ந்து விஜய் டி.வியும் குழந்தையை மையமாக கொண்ட கதையுடன் களம் இறங்குகிறது. கிராமத்து பெண் குழந்தையின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது மெளனராகம் தொடர்.
கிராமத்தில் பாடித் திரியும் அந்த குழந்தையின் தந்தை அதற்கு நினைவு வரும் முன்பே காணாமல் போகிறார். நினைவு வந்ததும் தன் தந்தையை தேடி அந்த சிறுமி பயணப்படுகிற கதை. அவள் தன் தந்தையை கண்டு பிடித்தாளா? இல்லையா என்பது கதையின் முடிவு. சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவள் தந்தையை தேடுகிற கதைக்களம் விரிவாக இருக்கும்.
தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்த தொடர் வருகிற 24ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. மெளனராகம் மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ரேவதி நடித்த வெள்ளி விழா படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.