ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாசமலர் சீரியலில் உமா என்ற பாசமான வேடத்தில் நடித்திருந்த ஜீவிதா, தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் மெல்லத்திறந்தது கதவு தொடரில் குழந்தையை கொலை செய்ய முயற்சிக்கும் கொடூரமான வில்லி வேடத்தில் நடித்து வருகிறார்.
இதுபற்றி ஜீவிதா கூறுகையில், மெல்லத்திறந்தது கதவு தொடரில் தீபா என்ற வேடத்தில் நடிக்கிறேன். ஒரு குழந்தையை பழிவாங்கும் வேடம். அந்த குழந்தை ஹீரோயினியோட வாரிசு என்பது யாருக்குமே தெரியாது. நான் இருக்கும் பேமிலிக்கு மட்டும்தான் அந்த ரகசியம் தெரியும். அந்த குழந்தை இருந்தால்தான் சொத்துக்கு வாரிசு கொண்டாடுவார்கள். அதனால் அந்த குழந்தையையே அழித்து விடலாம் என்று என்னை உருவாக்கி அனுப்புவார்கள்.அந்த குழந்தையின் அம்மாவாக நான் அந்த வீட்டிற்குள் போயிருப்பேன்.
எனக்கு கீழே நாலு கேங் இருக்கும்.
ஏதாவது ஒரு விதத்தில் அந்த குழந்தையை பழிவாங்க வேண்டு மென்று முதலில் சாப்பாட்டில் விஷம் வைப்பேன். அதையடுத்து பாம்பை வீட்டிற்குள் விடு வேன். இப்படி நான் என்ன செய்தாலும் அந்த குழந்தை தப்பித்துக்கொண்டே வரும். இந்த சீரியல் பெண்களை மட்டுமின்றி குழந்தைகளையும் அதிகமாக ஈர்த்துள்ளது.
மேலும், நான் பாசமலர் சீரியலில் உமா என்ற கேரக்டரில் பாசமாக சாதுர்யமாக நடித்து விட்டு, இந்த சீரியலில் சின்ன பிள்ளையை கொலை பண்ண வந்திருப்பதைப் பார்த்து, என் மீது ஆடியன்ஸ் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஷாப்பிங் போகும்போது என்னை எதேச்சையாக பார்க்கும் சில பெண்கள், அந்த சின்ன பெண் அஞ்சலி என்ன பாவம் செய்தது. ஏன் இப்படி அதை கொலை பண்ண துடிக்கிறீர்கள்? என்று கோபமாக திட்டுகிறார்கள். அவர்களிடம், அது ஒரு கதை. அதில் டைரக்டர் கொடுத்த வேடத்தைதான் நான் பண்ணுகிறேன். எப்படி முடியாது என்று சொல்ல முடியும் என்று கூறி வருகிறேன்.
நெகடீவ் ரோலும் எனக்கு நல்ல ரீச் கொடுத்திருக்கிறது. ஆபீஸ் சீரியலை இயக்கிய பிரம்மா இந்த சீரியலை இயக்குகிறார். முக்கியமாக, என்னை பயங்கரமான வில்லியாக காண்பித்து வருகிறார். என்னை நம்பி இப்படியொரு அழுத்தமான வேடத்தை கொடுத்ததற்கு அவருக்குதான் பெரிய நன்றி சொல்ல வேண்டும் என்று கூறும் ஜீவிதா, தற்போது ஆண்தேவதை, ஆருத்ரா, வண்டி ஆகிய படங்களில் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.