ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
எத்தனையோ திறமையிருந்து சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அல்லோலப்படுபவர்கள் ஏராளம். முன்பெல்லாம் பட வாய்ப்பு பெற வேண்டுமானால் ஒவ்வொரு கம்பெனி கம்பெனியாக ஏறி - இறங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை, டிஜிட்டல் யுகம் வந்த பிறகு தங்களது திறமையை வீடியோக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி அதன்மூலம் வாய்ப்பு பெறுகின்றனர். சிலர் குறும்படங்கள் மூலம் பிரபலமாகின்றனர். இருந்தாலும் திறமையிருந்து சோபிக்க முடியாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி உள்ளவர்களுக்கு பிரபல இணையதள டிவியான ‛யப்-டிவி' புதிய மேடை அமைத்து தந்துள்ளது. அதன்பெயர், ‛யப்-டிவி ஒரிஜினல்'.
சினிமா மட்டுமல்லாது, குறும்படங்கள், குறுந்தொடர்கள், சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வழிவகை செய்துள்ளது இந்த இணையதள டிவியான ‛யப்-டிவி'. இந்த ‛யப்-டிவியில் ‛ஒரிஜினல்' என்ற புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குறும்படங்கள், குறுந்தொடர்கள் உள்ளிட்டவைகள் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் இதன் அறிமுக விழா ஐதராபாத்தில் நடந்தது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இதை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது யப் டிவி., நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரியான உதய் ரெட்டி உடன் இருந்தார். இதுகுறித்து மகேஷ் பாபு கூறுகையில், சினிமாவில் திறமையானவர்களுக்கு வாய்பளிக்க இப்படியொரு தளத்தை ஏற்படுத்தி தந்த ‛யப்-டிவி'-யை மனதார பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
முதலாவதாக யுகாதி அன்று ‛எண்டிகுலா' என்ற குறுந்தொடர் ஒளிப்பரப்பாக இருக்கிறது. ஐ-கேண்டி சார்பில் லக்ஷ்மண் கார்யா இத்தொடரை இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, ‛ஏர்லி மார்னிங்' என்ற தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது.