ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுல்தான், மகன்டே அச்சன், உத்தரா ஸ்வயம்வரம் உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்தவர் வரதா. சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது மலையாள சின்னத்திரையின் முன்னணி நடிகையாகிவிட்டார். மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான அமலா என்ற தொடர் அவருக்கு சின்னத்திரையில் பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது பிரணயம் தொடரில் நடித்து வருகிறார்.
என்றாலும் வரதாவிற்கு தமிழ் சீரியலில் நடிக்க வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. இதற்கு முன் அவர் காதலிக்கலாமா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். இதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார்.
"சினிமா வாய்ப்பு நன்றாக கிடைத்தபோதே சின்னத்திரைக்கு வந்தேன். அது எனக்கு பிடித்திருந்தது. தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசை எப்போதும் உண்டு. சில முயற்சிகள் சரியாக அமையவில்லை. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சின்னத்திரையாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் ஓகே" என்கிறார் வரதா.