ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுமார் 75 சீரியல்களில் நடித்திருப்பவர் கெளசிக். பாசிட்டீவ், நெகடீவ், காமெடி என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்திருக்கும் அவர், 2 படங்களை இயக்கியிருப்பவர், 2 படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
இதுவரை நடித்துள்ள சீரியல், படங்கள் பற்றி?
பாலுமகேந்திராவின் கதை நேரம், கே.பாலசந்தரின் அண்ணி சீரியல்களைத் தொடர்ந்து எங்கிருந்தோ வந்தாள், எதிர்நீச்சல், றெக்க கட்டிய மனசு. இது ஒரு காதல், காமெடி காலணி உள்பட சுமார் 75 சீரியல்களில் நடித்திருக்கிறேன். இதில் 15 தெலுங்கு சீரியல்களும் அடங்கும். மேலும், தூவானம், காதல் சரிகம படங்களில் நாயகனாக நடித்துள்ளேன். அதோடு, ஆதியும் அந்தமும், பனிவிழும் நிலவு போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறேன். ராமானுஜர் சீரியலில் ராமானுஜராக நடித்து விட்டு, தற்போது மும்பையிலுள்ள ஆல்ட் பாலாஜி என்ற நிறுவனம் தயாரிக்கும் மாயத்திரை என்றொரு நிகழ்ச்சியை 16 எபிசோட் இயக்குகிறேன்.
எந்தமாதிரியான கதாபாத்திரங்கள் உங்களுக்கு ரீச் கொடுத்தன?
நெகட்டிவ் நல்ல ரீச் கொடுத்தது. எல்லோருமே திட்டுவாங்க. அது மனசில் இடம் பிடித்துள்ளது. அதேபோல் நான் நடித்த காமெடி வேடங்களும் நல்ல பெயரை வாங்கித் தந்தன. நெகட்டிவ் ரோலில் எனக்கு ரோல் மாடல் கமல் சார்தான். அவர் எந்த ரோல் கொடுத்தாலும் பண்ணுவார். அவர் நெகட்டிவ் ரோலில் நடித்ததில் சிகப்பு ரோஜாக்கள், இந்திரன் சந்திரன் ரொம்ப பிடித்தமான படங்கள். அது மட்டுமின்றி, அன்பே சிவம், காதலா காதலா, அபூர்வ சகோதரர்கள், நாயகன் போன்ற படங்களும் என்னை வெகுவாக கவர்ந்த படங்கள்.
காமெடியாக நடிப்பதுதான் நடிப்பில் கஷ்டமானது என்று கமல் சொல்லியிருக்கிறாரே?
ஒருத்தரை அழ வச்சிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது கடினமான விசயம்தான். மேலும், எந்த கேரக்டராக இருந்தாலும், எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதை விட, அதில் எவ்வளவு இன்வால்வ்மென்டோடு நடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். மேலும், பொள்ளாச்சியில் ஒரு படப்பிடிப்பில் தவறி விழுந்து எனது முட்டியில் அடிபட்டது. அதுதான் என்னைப்பொறுத்தவரை கஷ்டமானது. மற்றபடி எந்த வேடங்களில் நடிப்பதும் எனக்கு கஷ்டமாக தெரியவில்லை.
ராமானுஜர் தொடர் எல்லாதரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்றொரு கருத்து உள்ளதே?
அப்படி சொல்ல முடியாது. ராமானுஜர் தொடரை பிராமின் மட்டுமின்றி அனைவருமே பார்த்தனர். அவர் மதத்திலும் புரட்சி பண்ணியிருக்கிறார். நான் வெளியூர்களுக்கு சென்ற இடங்களில் எல்லாதரப்பு மக்களுமே ராமானுஜர் தொடர் பற்றி என்னிடம் பேசினார்கள். அதனால் அந்த சீரியல் பற்றி பரவிய இந்த கருத்து தவறானது.
நடிப்பு, இயக்கம் என இருவழிப்பாதையில் செல்கிறீர்களே? இது எதிர்காலத்திலும் தொடருமா?
தற்போது மாயத்திரை தொடரை இயக்கி வருகிறேன். அதையடுத்து மீண்டும் சினிமாவில் இறங்குவேன். என்னைப்பொறுத்தவரை நடிப்பு, இயக்கம் இரண்டு கண்கள் மாதிரி. இவங்கிட்ட எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பான். எந்த படம் கொடுத்தாலும் நல்லமுறையில் இயக்குவான் என்று பெயரெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் சினிமாவில் முழுசாக இறங்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார் கெளசிக்.