ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்தவர் காயத்ரி புவனேஷ். அதையடுத்து சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சினிமா சினிமா நிகழ்ச்சியைத் தொடர்ந்து அடுத்து வேறு சில ஷோக்கள் நடத்த தயாராகிக்கொண்டிருக்கிறார். மேலும், சின்னத்திரையில் தான் பிசியாக இருந்தபோதும் நடனத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக லெட்ஸ் டான்ஸ் -என்ற பெயரில் ஒரு நடன பள்ளியை சென்னையிலுள்ள அண்ணா நகரில் நடத்தி வருகிறார் காயத்ரி புவனேஷ்.
அதுகுறித்து அவர் கூறுகையில், சின்ன வயதில் இருந்தே எனக்கு நடனத்தின் மீது ஈர்ப்பு அதிகம். அதனால் முறைப்படி நடனம் கற்றுக்கொண்டேன். அதோடு எனக்குத்தெரிந்த நடனத்தை ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற ஆசையில், லெட்ஸ் டான்ஸ் -என்ற பெயரில் ஒரு நடன பள்ளி நடத்தி வருகிறேன். இந்த பள்ளியில் வெஸ்டர்ன், ஹிப்ஹாப், பாலே, மும்பா, யோகா, குச்சிப்புடி, கிளாசிக்கல் உள்பட பலவகையான நடனங்களை கற்றுக்கொடுக்கிறேன். எனது பள்ளிக்கு 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனம் பயில வருகிறார்கள். அந்த வகையில், 250 பேருக்கு நடன பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
அதோடு, பலவகையான நடனங்கள் கற்றுக்கொடுப்பதால் அந்தந்த நடனத்திலுள்ள திறமையான நடன ஆசிரியர்களை வைத்து சரியான முறையில் பயிற்சி கொடுக்கிறேன். எனது பள்ளியில் பயிற்சி எடுத்தவர்கள் மேடை நிகழ்ச்சி , சினிமாக்களிலும் பங்குபெற்று வருகிறார்கள். அந்த வகையில், இப்போது நான்காவது ஆண்டில் இந்த பள்ளியை நடத்திக்கொண்டிருக்கிறேன். அதோடு, ஏப்ரல் 14-ந்தேதி நான்காவது ஆண்டு விழாவை சென்னையிலுள்ள மியூசிக் அகடாமியில் நடத்துகிறேன். சினிமா, சின்னத்திரையில் உள்ள பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்று சொல்லும் காயத்ரி புவனேஷ், இப்படி நான் கற்ற கலையை மற்றவர்களுக்கு பயிற்றுவித்து கொடுப்பது மனதுக்கு தீருப்தியாக உள்ளது என்கிறார்.